எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் தை ,மாசி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் எமது இல்ல பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வு என்பன 08.03.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி ஜெயராணி பரமோதயன் செயலாளர் சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி நளாயினி இன்பராஜ் மேலதிக அரசாங்க அதிபர்.காணி , கிளிநொச்சி அவர்கள் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் இல்லக்குழந்தைகள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர் .
மேலும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரால் மகளிர் உரிமை பற்றிய மகளிர் தின சிறப்புரை இடம்பெற்றது . அத்துடன் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்களுக்கான கெளரவிப்பும் விருந்தினர் கெளரவிப்பும் இடம்பெற்றதுடன் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. . அதன் பதிவுகள் சில
Categories