சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களுக்கான “பிள்ளைகளே எமது உலகம்” எனும் தொனி பொருளில் கலை , மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிக்கட்ட நிகழ்வானது 01 .09.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது . இந் நிகழ்வில் எமது இல்லப்பிள்ளைகள் சிறப்பாக செயல்ப்பட்டதுடன் அதி கூடிய பரிசில்களும் பெற்றுக்கொண்டனர்