Categories
News

இல்லக் குழந்தைகளின் ஆவணி, புரட்டாதி மாத பிறந்த நாள் விழா

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018  ஆவணி, புரட்டாதி மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்த நாள் விழா 30.10.2018 ஞாயிற்றுக் கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னத்தம்பி இராமமூர்த்தி (நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச செயலகம், கரைச்சி) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி இராமமூர்த்தி யசோதா (ஆசிரியர், கிளி. கிளிநொச்சி இந்துக் கல்லூரி) அவர்களும் திருமதி சாந்தினி சக்திவேல் (கனடா) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.