24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் DSI நடாத்திய கிளிநொச்சி மாவட்டமட்ட கரப்பாந்தாட்டப்போட்டிகளில் எமது இல்லத்தின் சிரேஸ்ட மகளிர் 19 வயது பிரிவு பெண்கள் அணி வீராங்கனைகள் 1ம்இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் DSI நடாத்திய கிளிநொச்சி மாவட்டமட்ட கரப்பாந்தாட்டப்போட்டிகளில் எமது இல்லத்தின் சிரேஸ்ட மகளிர் 19 வயது பிரிவு பெண்கள் அணி வீராங்கனைகள் 1ம்இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆயுட்கால அங்கத்தவர் சுவாமி காஜத்ரி மாதாஜி அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான நினைவுக்கல் நாட்டல் நிகழ்வு 14.06.2022 அன்று இடம்பெற்றது.
அதன் பதிவுகள் சில…..
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (MAY-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.05.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச்செல்வதற்கான முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மாலை -4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நிகழ்வின் பதிவுகள் சில…
நிகழ்வின் பதிவுகள் சில
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் திருவள்ளுவர் முன்பள்ளி மற்றும் அறநெறிப் பாடசாலைகளுக்கான விளையாட்டு விழா 09.04.2022 அன்று பி.ப. 2.30 மணியளவில் மகாதேவா சுவாமிகள் ஆண்கள் சிறுவர் இல்ல விளையாட்டு மைதானத்தில் ஆண்கள் இல்ல தலைவர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் தலமையில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வின் விருந்தினர்களாக திரு. ச. மோகனபவன் தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு. தங்கவேல் கண்ணபிரான் அதிபர் கிளி/புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயம் அவர்களும் முகாமைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்ததுடன் குழந்தைகளின் விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற்றன.
பதிவுகள் சில…
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் விளையாட்டுக்களின் வரிசையில் ஆண் குழந்தைகளுக்கான காற்பந்தாட்ட போட்டி 31/03/2022 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் சேரன். சோழன் ஆகிய இரு இல்லங்களும் போட்டியிட்டு சேரன் இல்லம் வெற்றி பெற்றது. அதன் பதிவுகள் சில…..
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022 பங்குனி மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 27.02.2022 அன்று இல்ல தலைவர் திரு. ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு. இ.அரியரட்ணம் அவர்கள் பிரசித்தி நொத்தாரிசு வடமாகாண யாழ்மேல் நீதி மன்ற வலயம் அகில இலங்கை சமாதான நீதவான் தலைவர் பூனகரி பலநோக்கு கூட்டுறவு சங்கம், திரு. சி.பத்மசிறி அவர்கள் பொருளாளர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் கிளிநொச்சி உதவி ஆணையாளர் காணி உரித்து மற்றும் தீர்வு திணைக்களம் வடமாகாணம். அவர்களும் திரு. கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.