எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 29 பிள்ளைகளுக்கான பூப்புனித நீராட்டுவிழா எமது இல்ல தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலமையில் 17.09.2022 அன்று மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
நிகழ்வின் பதிவுகள் சில….




















எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 29 பிள்ளைகளுக்கான பூப்புனித நீராட்டுவிழா எமது இல்ல தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலமையில் 17.09.2022 அன்று மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.
நிகழ்வின் பதிவுகள் சில….
வெளியாகிய க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கலைப்பிரிவில் கல்வி கற்ற எமது இல்ல மாணவர்களான
ம. தர்சினி – ACS மாவட்ட நிலை -216
காயத்திரி- B2C மாவட்ட நிலை -167
பிரசன்னா- 2CS மாவட்ட நிலை -324
ஆகிய மூவரும் பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-August மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 28.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு கந்தையா கணேசலிங்கம் அவர்கள் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உருத்திரபுரம் அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது .
பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
நிகழ்வின் பதிவுகள் சில…
எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குருகுல முன்பள்ளியில் குழந்தைகளுக்கான சந்தைவிழா நடைபெற்றது.
அதன் பதிவுகள் சில….
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-july மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 07.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு திருமதி விநாயகமூர்த்தி விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் மாலதி அவர்கள் நோர்வே அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது .
பிரதமவிருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் எமது இல்லத்தில் சிறுவயதில் இருந்து கராத்தே பயின்று வந்த த. சானுயா , ந. சர்மிளா ஆகியோருக்கு கறுப்பு பட்டி பரீட்சையில் திறமை சித்தி பெற்றமையினால் அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் சென்சே. விஜயராஜ் அவர்களினால் கறுப்பு பட்டி சான்றிதல் வழங்கப்பட்டது.
நிகழ்வின் பதிவுகள் சில….
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-MAY, JUNE மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 26.06.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருநந்தினர்களாக திரு ஞானலிங்கம் பரணீகரன் (சுவிஸ்) அவர்களும் திரு சின்னத்துரை துரைசிங்கம் (இலண்டன்) அவர்களும் விருந்தினர்களாக கலந்துகொண்டு குழந்தைகளை வாழ்த்தி மகிழ்வித்ததுடன் இந் நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள். எமது இல்ல பழைய மாணவர்கள் .பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர். பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர். அத்துடன் DSI நிறுவனத்தினரால் பாடசாலை ரீதியாக மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றி பெற்று தேசிய மடடத்திற்கு தெரிவான எமது இல்ல குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் DSI நடாத்திய கிளிநொச்சி மாவட்டமட்ட கரப்பாந்தாட்டப்போட்டிகளில் எமது இல்லத்தின் சிரேஸ்ட மகளிர் 19 வயது பிரிவு பெண்கள் அணி வீராங்கனைகள் 1ம்இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஆயுட்கால அங்கத்தவர் சுவாமி காஜத்ரி மாதாஜி அவர்களின் திருவுருவச்சிலை அமைப்பதற்கான நினைவுக்கல் நாட்டல் நிகழ்வு 14.06.2022 அன்று இடம்பெற்றது.
அதன் பதிவுகள் சில…..
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (MAY-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.05.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச்செல்வதற்கான முக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு மாலை -4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.
நிகழ்வின் பதிவுகள் சில…